அடித்து கொல்லப்பட்டட மதுவின் குடும்பத்திற்கு சேவாக் நிதியுதவி

                                 


                                       கேரளாவில் அரிசி திருடியதற்காக அடித்து கொல்லப்பட்ட மதுவின் குடும்பத்திற்கு அவரது தாயாரிடம், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் நிதியுதவி அளித்துள்ளார்.

கேரள மாநிலம் அட்டப்பாடியில் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி மது (27) என்ற ஆதிவாசி இளைஞர், ரூ.200 மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்களை திருடியதற்காக 16 பேர் கொண்ட கும்பலால் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவமானது தேசிய அளவில் பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து மதுவுக்கு ஆதரவாக பல்வேறு பிரபலங்களும் பொதுமக்களும் குரல் கொடுத்தனர்.

மேலும், கேரளாவில் உள்ள பல்வேறு சமூக அமைப்புகளும் மதுவின் குடும்பத்திற்கு தங்களால் ஆன பொருளுதவிகளை செய்து வந்தனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான வீரேந்திர சேவாக், ரூ.1.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

Top Seithigal

Comments